மம்தா பானர்ஜி மீது கடும் விமர்சனம்; பேரணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரியில் பயிற்சி பெண் டாக்டரின் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியளித்துள்ளது. சிபிஐ இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்யத் தொடங்கியுள்ளன. மம்தா பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. அதற்கிடையில், ரிஜிஸ்டர் செய்யாத மாணவர்கள் அமைப்பு இன்று நபன்னோ நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக 6 ஆயிரம் போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும், 19 இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேரணியில் அரசியல் கட்சி தலைவரின் தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.