உலகிலேயே முதல் முறையாக, கொல்கத்தாவை சேர்ந்த ஒருவருக்கு கொடிய தாவர பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் மனிதர்களுக்கு ஏற்படுவது இதுவே முதல் முறையாக சொல்லப்பட்டுள்ளது. தி மெடிக்கல் மைக்காலஜி கேஸ் ரிப்போர்ட் என்ற இதழில் இது குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கொல்கத்தாவை சேர்ந்த 61 வயது நபருக்கு இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, கரகரப்பான குரல், இருமல், அசதி, முழுங்க முடியாத தன்மை போன்ற கோளாறுகள் 3 மாதங்களாக இருந்துள்ளன. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்முறையாக ஒரு தாவரவியலாளர் ஆவார். எனவே, நீண்ட நாட்களாக பூஞ்சைகள், காளான்கள் போன்றவற்றுடன் பணியாற்றி வந்ததால், அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், 2 வருடங்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, இந்த நோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.