ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர்-1 சுற்றில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது.
நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே குவாலிபயர் - 1 தொடர் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய ஹைதராபாத் அணி 159 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராகுல் திரிவாதி 55 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் மற்றும் ஷ்ரேயாஷ் இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். பின்னர் கொல்கத்தா அணி 13.4 ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது