எக்ஸ் தளத்தை போன்ற எழுத்து பதிவு இந்திய செயலி ‘கூ’ ஆகும். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய போதும், கொரோனா காலகட்டத்திலும், ‘கூ’ செயலிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனால், ட்விட்டர் எக்ஸ் ஆக மாற்றம் அடைந்த பிறகு, இந்த தளத்திற்கான வரவேற்பு குறையத் தொடங்கியது. தற்போது, இந்த நிறுவனத்தை முழுமையாக மூட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
‘கூ’ சமூக செயலி நிறுவனம் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கூ செயலிக்கான வரவேற்பு பொதுமக்கள் மத்தியில் குறைந்து போனதால், மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு கூட சொந்த பணத்திலிருந்து சம்பளத்தை வழங்கும் அவல நிலை உள்ளது. இந்த நிலையில், ‘கூ’ செயலியை டெய்லி ஹன்ட் நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ‘கூ’ சமூக செயலி நிறுவனத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளது.