கொசஸ்தலை, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரை பாலங்கள் நீரில் மூழ்கியது.
கடந்த சில தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர் வரத்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் தொடர்ந்து பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி 3210 கன அடியாக தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதிகளவிலான உபரிநீர் வெளியேற்ற படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மேலும் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு வாகனங்கள் செல்கின்றன. புதிதாக கட்டி வரும் மேம்பாலத்தில் வாகனங்கள் தற்போது சென்று வருகின்றன. அதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மேம்பாலம் விரைவில் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.