28 April 2022, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக கோயம்பேட்டில் 2 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.இந்நிகழ்ச்சியில்,நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைவர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
5,419 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள,இக்கட்டிடத்தின் தரைத்தளகோயம்பேட்டில் ரூ.2 கோடி செலவில் பணியாளர்களுக்கு ஓய்வுக்கூடம், சிற்றுண்டியகம்: திறந்து வைத்த முதல்வர்!!!த்தில், 24 இருக்கைகள் கொண்ட உணவருந்துமிடம், சமையலறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளது.முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தலா 20 எண்ணிக்கைகள் கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய ஓய்வுக்கூடம், கழிவறை, குளியலறை வசதிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.