சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தை இடம் மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தனியார் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஆம்னி பேருந்துகள் நிறுத்தத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றி எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அருகே கிளாம்பாக்கதில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க தனியார் பேருந்து முனையத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.