கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு… அறநிலையத் துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்!

April 29, 2022

28 April 2022, தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம்,சொகுசு பங்களா,மற்றும் நூற்பாலையும் கட்டப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவரும் வெங்கட்ராமன் என்பவரும்,வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

28 April 2022, தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம்,சொகுசு பங்களா,மற்றும் நூற்பாலையும் கட்டப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவரும் வெங்கட்ராமன் என்பவரும்,வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.ராதாகிருஷ்ணன் மற்றும் வெங்கட்ராமன் எகொடுத்த மனுவில் குளம் தூர்வாருதல், கோவில் மண்டபம் புதுப்பித்தல் என்ற பெயரில் மணல் திருட்டு, நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கட்டுமானம் நடைபெறுவதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் சில வருடங்களில் உரிமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு விடுவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்க கோரிக்கை வைத்தனர். நீதிபதியின் விசாரணையின் போது,இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் கூறியதாவது,நிலத்தை கணக்கிடவும், ஆக்கிரமிப்பை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் நிலங்களை மீட்க, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.இதை கேட்ட நீதிபதிகள், கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு பெரிய கட்டுமானங்கள் கட்டப்பட்டது, மூன்றாவது நபர் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிறகுதான் அறநிலையத் துறைக்கே தெரிய வருகிறது’ என வேதனை தெரிவித்த நீதிபதிகள் அறநிலையத் துறை ஆய்வாளர்களின் செயல்படாத காரணத்தினால், அவர்களின் ஒரு வருட சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது எனவும், அவர்கள்தான் சம்பந்தப்பட்ட ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் எனவும்,இதனை உள்ளாட்சி அமைப்புகளும் எப்படி அனுமதித்தது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். யார் அனுமதித்தார்கள், தடுக்காதவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிடம் கட்டிமுடிக்கப்படும் வரை காத்திருக்கும் அதிகாரிகள், அதன்பின்னரே நோட்டீஸ் அனுப்புவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள். நடவடிக்கை எடுக்காத அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர். அறநிலையத் துறை வழக்குகளில் ஆஜராவதற்கு கூடுதலாக வழக்கறிஞர் நியமிக்க உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள் விசாரணை ஒத்திவைத்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu