பழனி முருகன் கோவிலில் படிப்பாதை, உப சன்னதிகளில் இன்று கும்பாபிஷேகம்

January 26, 2023

பழனி முருகன் கோவிலில் படிப்பாதை, உப சன்னதிகளில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை பழனி கோவில் படிப்பாதை மற்றும் உப சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை பாதவிநாயகர் கோவில், இடும்பன், கதம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலகர், சண்டிகாதேவி, விநாயகர், […]

பழனி முருகன் கோவிலில் படிப்பாதை, உப சன்னதிகளில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை பழனி கோவில் படிப்பாதை மற்றும் உப சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை பாதவிநாயகர் கோவில், இடும்பன், கதம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலகர், சண்டிகாதேவி, விநாயகர், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, வேலாயுதசாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழனி மலைக்கோவிலில் ராஜகோபுரம் உள்பட பிற சன்னதிகளில் நாளை காலை 8 மணிமுதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை காண 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு வரமுடியாத பக்தர்கள் கீழே இருந்து கும்பாபிஷேகத்தை காண வசதியாக அடிவாரம், கிரிவீதிகள், பஸ்நிலையம் உள்பட 18 இடங்களில் அகண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu