மிசோராமில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜோரா மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மிசோராமில் உள்ள 40 தொகுதிகளில் கடந்த மாதம் 7ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் 82 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த நான்காம் தேதி நடைபெற்றது. இதில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணி கட்சியை வீழ்த்தி மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரா மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரியாக கட்சியின் தலைவர் லால்டுஹோமோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்க மாநில கவர்னர் ஹரிபாபுவை சந்தித்து உரிமை கோரினார். பின்னர் நாளை முதல் மந்திரியாக லால்டுஹோமா பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.