மீண்டும் இந்தியச் சந்தையில் லாம்ப்ரெட்டா - 2024ல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது

September 3, 2022

1960 களில் இந்திய வாகன சந்தையை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்த லாம்ப்ரெட்டா, 2023 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியச் சந்தைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன், 2024 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மின்சார வாகனம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளது. இன்னசென்ட்டி குழுமம், பர்ட் குழுமத்துடன் இணைந்து, இந்தியாவில் லாம்ப்ரெட்டா வண்டிகளின் புதிய அவதாரத்தை கொண்டு வர உள்ளது. இதற்காக, லாம்ப்ரெட்டா நிறுவனம் 51% பங்குகளும் பர்ட் குழுமம் 49% பங்குகளும் கொண்டு, புதிய ஜாயிண்ட் வென்சரில் இணைந்துள்ளன. […]

1960 களில் இந்திய வாகன சந்தையை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்த லாம்ப்ரெட்டா, 2023 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியச் சந்தைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன், 2024 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மின்சார வாகனம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

இன்னசென்ட்டி குழுமம், பர்ட் குழுமத்துடன் இணைந்து, இந்தியாவில் லாம்ப்ரெட்டா வண்டிகளின் புதிய அவதாரத்தை கொண்டு வர உள்ளது. இதற்காக, லாம்ப்ரெட்டா நிறுவனம் 51% பங்குகளும் பர்ட் குழுமம் 49% பங்குகளும் கொண்டு, புதிய ஜாயிண்ட் வென்சரில் இணைந்துள்ளன. புதிய நிறுவனத்தின் மூலம், 200 முதல் 350 சிசி அதிவேக திறன் கொண்ட ஜி, வி மற்றும் எக்ஸ் ஆகிய வாகன மாடல்கள் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இன்னசென்ட்டி குழுமத்தின் நிர்வாக உறுப்பினரும், லாம்ப்ரெட்டா பிராண்டின் தலைவருமான வால்டர் ஷஃப்ரான், இது குறித்து முதன் முதலாக இந்திய ஊடகங்களிடம் பேசினார். அப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் லாம்ப்ரெட்டா கடந்த நூற்றாண்டில் நிகழ்த்திய மாயாஜாலத்தை, நாங்கள் மீண்டும் நிகழ்த்த இருக்கிறோம். எங்கள் ஸ்கூட்டர்களை இந்தியாவின் ஃபெராரியாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார். மேலும், லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள் உயர்ரக மாடல்களாகவே வெளிவரும் என்றும், மற்ற விலை உயர்ந்த ஸ்கூட்டர்களை விட இது 20% கூடுதல் விலையுடையதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு, உலகளாவிய முறையில் ஒரு லட்சம் வாகனங்களை விற்றுள்ள லாம்ப்ரெட்டா நிறுவனம், இந்தியாவில் அதைவிட இரண்டு மடங்கு விற்பனையை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்காக, இந்தியாவிலேயே ஒரு லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தி மையம் ஒன்றை நிறுவவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, உள்நாட்டில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாட்டிற்கு ஏற்றுமதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய வாகனச் சந்தையை இது மீண்டும் ஆளும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu