ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஜம்மு பகுதியின் ராம்பன் மாவட்டத்திலுள்ள கூனி நாலா பகுதியில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 144-இல் உள்ள சாலைகளில் பாறைகளை அகற்றும் பணியை தொடங்கியது. இந்த பணியானது 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது .இதனால் பயணிகள் இந்த பாதையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் இங்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.