வடக்கு பாகிஸ்தானில், கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது, இந்த பேரிடர் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 133 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் பருவமழை பெய்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் பேரழிவு மேலாண்மை வெளியிட்டுள்ள தகவல் படி, கடந்த 3 வாரங்களில், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 133 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமாக, வடமேற்கு கைபர் பக்துன்வா மாகாணத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜீலம், சட்லஜ் செனாப் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.