யாகி புயல் - மியான்மரில் 226 பேர் பலி

September 18, 2024

யாகி புயல் காரணமாக மியான்மரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. தென்சீனக் கடலில் உருவானது யாகி புயல். இது பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. புயலின் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளன. இந்நிலையில் மியான்மரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளதுடன், 77 பேர் காணாமல் போயுள்ளனர்.யாகி புயல் […]

யாகி புயல் காரணமாக மியான்மரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.

தென்சீனக் கடலில் உருவானது யாகி புயல். இது பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. புயலின் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளன. இந்நிலையில் மியான்மரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளதுடன், 77 பேர் காணாமல் போயுள்ளனர்.யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசை தாக்கியது. இதில், வியட்நாமில் 300 பேர், தாய்லாந்தில் 42 பேர் மற்றும் லாவோசில் 4 பேர் உயிரிழந்தனர் என தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu