அருணாச்சலில் நிலச்சரிவு - சீன எல்லைப் பகுதி சாலை துண்டிப்பு

April 26, 2024

அருணாச்சல பிரதேசத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதால் சீன எல்லைப் பகுதி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அருணாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீன எல்லையை ஒட்டி உள்ள திபாங் பள்ளத்தாக்கினை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 33 இல் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு துண்டானது. அதனால் ஹூன்லி - அனினி இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க மூன்று […]

அருணாச்சல பிரதேசத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதால் சீன எல்லைப் பகுதி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அருணாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீன எல்லையை ஒட்டி உள்ள திபாங் பள்ளத்தாக்கினை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 33 இல் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு துண்டானது. அதனால் ஹூன்லி - அனினி இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க மூன்று நாட்கள் ஆகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் சீரமைப்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu