அசாமில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அங்கு உள்ள 15 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் அசாம் மாநிலம் கரீங்கஞ்ச் படர்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது














