இந்தோனேசியாவில் நிலச்சரிவு - 18 பேர் பலி

April 15, 2024

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின்போது சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின்போது சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேரை காணவில்லை. சுலவேசி மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள டாரா டோரஜா மாவட்டத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. அதேபோல் மகலே கிராமத்திலும் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கே சிக்கியவர்களை காவல்துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு […]

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின்போது சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின்போது சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேரை காணவில்லை. சுலவேசி மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள டாரா டோரஜா மாவட்டத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. அதேபோல் மகலே கிராமத்திலும் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கே சிக்கியவர்களை காவல்துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு தேடி வந்தனர். இந்த இரு கிராமங்களில் இருந்து 18 உடல் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் மோசமான வானிலை மற்றும் நிலப்பரப்பு போன்றவற்றால் மீட்பு பணி தொய்வு அடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu