வியாழன் கோளின் நிலவில் மிகப்பெரிய அளவிலான உப்பு நீர் கடல் மறைந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.
வியாழன் கோளின் யூரோப்பா நிலவு பனி சூழ்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பனிக்கு அடியில், உப்பு நீர் கடல் இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஹப்பிள் தொலைநோக்கி, கலிலியோ தொலைநோக்கி, ஜூனோ விண்கலம் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆகிய அனைத்திலும் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, நாசா விஞ்ஞானிகள் இதனை தெரிவித்துள்ளனர். மேலும், யூரோப்பா நிலவில் பூமியை விட இரண்டு மடங்கு பெரிய உப்பு நீர் கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.














