இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்கள், வெளிநாடுகளில் இருந்து அங்கு புலம் பெயர்ந்தவர்களாக அறியப்படுகின்றனர். குறிப்பாக, வேல்ஸ் பகுதியில் 6ல் ஒருவரும், லண்டன் பகுதியில் 10ல் ஒருவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர்களில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இரண்டாம் இடத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்களும், மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானியர்களும் உள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, பிரிட்டன் மக்கள் தொகையில் 1.5% இந்தியர்கள், 1.2% போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள், 1% பாகிஸ்தானியர்கள் ஆவர். கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, லண்டனில் உள்ள 21% மக்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அது, 2021 ஆம் கணக்கெடுப்பில் 23% ஆக உயர்ந்துள்ளது. இது புலம்பெயர்வு விகிதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்தியா, போலந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இத்தாலி, ருமேனியா நாடுகளைச் சேர்ந்தவர்களின் புலம்பெயர்வு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.