இஸ்ரேலில் அமெரிக்க அமைச்சர் பிளிங்கன் பேச்சுவார்த்தை

March 22, 2024

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் ராணுவம் காசாவின் தெற்கு பகுதியான ரபாவை நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவில் அமெரிக்கா கருத்து வேறுபாடு கொண்டுள்ளது. எனவே அதற்கான மாற்று வழிகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. எனவே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேச்சுவார்த்தை […]

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் காசாவின் தெற்கு பகுதியான ரபாவை நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவில் அமெரிக்கா கருத்து வேறுபாடு கொண்டுள்ளது. எனவே அதற்கான மாற்று வழிகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. எனவே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். போர் தொடங்கிய பிறகு செல்வது இது ஆறாவது முறையாகும்.

இது குறித்து பிளிங்கன் கூறியதாவது, ரஃபாவில் இஸ்ரேல் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த நடவடிக்கைக்கு நாங்கள் எந்த ஆதரவும் அளிக்கப் போவதில்லை. ஹமாசை அழிக்க இந்த நடவடிக்கை அவசியமானது கிடையாது என்று கூறினார். மாற்றாக ஹமாசை எதிர் கொள்ள வேறு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிளிங்கன் ஆலோசிக்க உள்ளார். இதனை அடுத்து அடுத்த வாரம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் மற்றும் உயர்மட்ட குழுவினர் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளனர் என்று கூறப்படுகிறது.

ரஃபா நகர் மீது நடத்தப்படும் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு காரணமாக விரைவில் விரிசல் விழுந்து வருகிறது. இதற்கிடையே போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் விடுதலை குறித்த அமெரிக்க தீர்மானம் ஐநாவின் வாக்கெடுப்புக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu