இந்தியாவின் முதல் எல்.என்.ஜி. ,எரிவாயு லாரியை 'ப்ளூ எனர்ஜி மோட்டார்ஸ்' நிறுவனம் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
இது குறித்து ப்ளூ எனர்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனிருத் புவல்கா கூறுகையில், ராஜஸ்தானில் உள்ள 'ஜெ.கே.ல ட்சுமி சிமென்ட்' நிறுவனத்தின் ஆலையில் எல்.என்.ஜி., எரிவாயு லாரிகளின் முதல் தொகுப்பு துவக்கப்பட்டுள்ளது. எல்.என்.ஜி., எரிவாயு லாரிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் வாயிலாக மாசுபாடு இல்லா சுற்றுச்சூழலை ஏற்படுத்த முடியும். இந்தியாவின் சூழல் மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு இந்த லாரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கு இது மிகவும் ஏற்ற வழியாகும். அதனால், சிமென்ட் தயாரிப்பாளர்கள் எங்களுடன் கைகோர்த்துள்ளனர். இதேபோல், மற்ற துறை நிறுவனங்களும் எங்களுடன் பயணிப்பர் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.