உச்சநீதிமன்றத்தில் புதிய செல்போன் செயலி 2.0 அறிமுகம் ஆகியுள்ளது.
இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 என்ற செயலி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தயாராக உள்ளது. இந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியில் இந்த முறை கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 செயலி இன்னும் ஒரு வாரத்தில் ஆப்பிள்/ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும்.
வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை இந்த செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம். சட்ட அதிகாரிகள் தங்கள் வழக்குகளின் நிலை, உத்தரவு, தீர்ப்புகள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.