பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி ஜார்கண்ட் மாநிலத்திற்கு இன்று மற்றும் நாளை பிரதமர் மோடி பயணம் செய்கிறார். இதில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இதன்படி அங்கு காலை 11:30 மணியளவில் குந்தியில் பழங்குடியின பெருமை தினத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இதில் சுமார் 24000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ஜார்க்கண்டில் ரூபாய் 7200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அற்பணிக்க உள்ளார்.