லெபனானின் பெகா பகுதியில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் விமானப் படை நேற்றிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில், ஆயுத உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ராணுவ உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. மேலும், சிரியா-லெபனான் எல்லையில், ஹிஸ்புல்லா ஆயுதக் கடத்தலுக்காக உருவாக்கிய கட்டமைப்புகளும் தாக்குதலில் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா இயக்கம் ஆளில்லா விமானத்தைக் கொண்டு தாக்குதல் முயற்சி செய்தது. ஆனால் இஸ்ரேல் விமானப் படை அதை முறியடித்தது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.