நேற்று லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மற்றும் ஈராக்கில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இதற்கு இஸ்ரேல் தொடர்ந்து பதிலளிக்கிறது. குறிப்பாக லெபனானுக்குள் அதிரடி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதுவரை, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 2,672 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,500 பேர் காயமடைந்துள்ளனர்.