ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் ராணுவ படை பிரிவு தலைமையகத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
இஸ்வேல் ராணுவ படையின் தலைமையகத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதாக லெபனானை சேர்ந்த அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, நேற்று இஸ்ரேல் ராணுவத்தினரை குறி வைத்து ஏராளமான ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்தின் கலிலி படை பிரிவு தலைமையகத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது.
இந்த ட்ரோன் தாக்குதலில் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேபோல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிரியாவின் கோலன் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆனால் இதில் யாரும் காயமடையவில்லை என்று இஸ்ரேல் தரப்பில் கூறிய கூறப்பட்டுள்ளது. 30 ஏவுகணைகளும் திறந்தவெளியில் விழுந்தன என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் குறித்த எச்சரிக்கை ஒலி கூட எழுப்பப்படவில்லை என்று ராணுவம் கூறியுள்ளது. இதற்கிடையே மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.