இந்த வருட லியோனிட் எரி நட்சத்திர நிகழ்வு, நவம்பர் 3 முதல் டிசம்பர் 2 வரை ஏற்படுகிறது. இந்தியாவிலிருந்து காணக்கூடிய வகையில் தெரியும் லியோனிட் எரி நட்சத்திர நிகழ்வு, நவம்பர் 17, 18 ஆம் தேதிகளில் அதன் உச்ச நிலையை எட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும், பூமியானது Temple Tuttle என்ற வால் நட்சத்திரத்தை கடக்கும் பொழுது, அதில் இருக்கும் சிறிய பாறைகள் மற்றும் தூசி படலங்கள் பூமியில் விழுகின்றன. அவை எரி நட்சத்திரங்களாக காட்சியளிக்கின்றன. இது இந்தியாவில் காணக்கூடிய அரிய வானியல் நிகழ்வாகும். இந்த ஆண்டு, லியோனிட் ஏரி நட்சத்திர நிகழ்வு நாளை மற்றும் ஞாயிறு இரவில் மிகத் தெளிவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில், ஒரு மணி நேரத்திற்கு 15 எரி நட்சத்திரங்களை காண முடியும் என கூறியுள்ளனர். இதை தெளிவாக காண்பதற்கு, இரவு நேர வானில், பிரகாசம் இல்லாத பகுதிக்கு சென்று, கும்மிருட்டில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.