பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியில், அட்னான் அகமது என்று அறியப்படும் அபூ ஹன்சாலா வசித்து வருகிறார். லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சையது என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக இவர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலில் பல பகுதிகளில் இருந்து துப்பாக்கி குண்டுகள் கிடைத்துள்ளன. அவரை சுட்டுக் கொன்றது யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு, காஷ்மீர் உத்தம்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அட்னான் அகமது மூளையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.