எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 75 பில்லியன் வருவாய் இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற வில்லியம் சோ, நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் உத்திகளில் ஒன்றாக இந்த ஐபிஓவை குறிப்பிட்டுள்ளார். இது தவிர, எல்ஜி நிறுவனத்தின் சந்தா சேவைகளை விரிவுபடுத்தி, அதன் விளம்பர ஆதரவு ஸ்ட்ரீமிங் சேவைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் மூலம், 2027 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகும் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு 14% வருவாய் உயர்வை பதிவு செய்தது. மேலும், திட்டமிடப்பட்டுள்ள ஐ பி ஓ, இந்திய பங்குச்சந்தையில் காணப்படும் அதிகரிப்புக்கு இணையாக உள்ளது. எனவே, இது பெரிதும் எதிர் நோக்கப்படுகிறது.