கடந்த மாதம் நாகை மாவட்டம் அக்கரை பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைபடகில் சென்றனர். அப்போது அவர்கள் எல்லை மீறி வந்ததாக இலங்கை கடற்படையினர் விசைப்படகை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இது குறித்து அங்குள்ள இலங்கை பருத்தித் துறை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவரகளை நீதிபதி நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.