ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா நாட்டில், ஆயுத குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
லிபியா நாட்டில் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், 444 படைப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும், சிறப்பு தற்காப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே, செவ்வாய்க்கிழமை முதல் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதன் காரணமாக 146 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
லிபியாவில் நடைபெற்று வரும் மோதலில், ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள் தவிர பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், உயிரிழந்தோரில், ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள் எத்தனை பேர், பொதுமக்கள் எத்தனை பேர் என்பது குறித்த விரிவான விவரங்கள் வெளிவரவில்லை.