எல்ஐசி நிறுவனம் பல்வேறு இந்திய நிறுவனங்களின் முக்கிய முதலீட்டாளராக இருந்து வருகிறது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 80 நிறுவன பங்குகளை எல்ஐசி குறைத்துள்ளது. இதில் 16 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும்.
கடந்த மார்ச் மாத இறுதியில், எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு 14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், முக்கிய நிறுவனங்களில் தனக்கு இருக்கும் பங்கு மதிப்பை எல்ஐசி குறைத்துள்ளது. பெல், செயில், கோல் இந்தியா, ஆயில் இந்தியா, மகாநகர் கேஸ், எம் ஓ ஐ எல், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, எச் பி சி எல், என் எம் டி சி ஸ்டீல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என் எம் டி சி, ஷிப்பிங் கார்ப்பரேஷன், ஓஎன்ஜிசி ஆகிய முக்கிய நிறுவனங்களில் இருக்கும் பங்கு மதிப்பை எல்ஐசி குறைத்துள்ளது. சுவாரசியமாக, பெரும்பாலான நிறுவனங்கள் இரட்டை இலக்க லாபத்தை பதிவு செய்துள்ள சூழலில் எல்ஐசி வெளியேறி உள்ளது.