LIC IPO – ஒரு பங்கின் விலை 902 முதல் 949 வரை

April 27, 2022

புதுடெல்லி, ஏப்ரல் 27, 2022: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப பொது வழங்கல் (IPO) மே 4 முதல் மே 9 வரை பொது வெளியீட்டிற்குத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, ஏப்ரல் 27, 2022:
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப பொது வழங்கல் (IPO) மே 4 முதல் மே 9 வரை பொது வெளியீட்டிற்குத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன், ஒரு ஈக்விட்டி பங்கின் விலை 902 ரூபாய் முதல் 949 ரூபாய் வரை இருக்கும் என்று Department of Investment and Public Asset Management (DIPAM) இன் செயலாளர் தூஹின் கண்டா பாண்டே அறிவித்துள்ளார். இந்த ஐபிஓ மூலம், எல்ஐசியில் அரசுக்குச் சொந்தமான 3.5 சதவீதப் பங்குகளை அரசாங்கம் விற்க உள்ளது. மேலும், இதன் மூலமாக அரசாங்கக் கருவூலத்திற்கு 21000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 60 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் இது குறைவாக இருந்தாலும், எல்ஐசி தான் நாட்டின் மிகப்பெரிய ஐபிவோவாக இருக்கும் என்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறப்பட்டது. மேலும், மொத்தம் உள்ள 22.13 கோடி பங்குகளில், 5.93 கோடி பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், பணியாளர்களுக்கு 1.58 மில்லியன் பங்குகளும், பாலிசிதாரர்களுக்கு 22.14 மில்லியன் பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சரி பாதி பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், 15 சதவீதப் பங்குகள் பிற நிறுவனங்களுக்கும், எஞ்சியுள்ள பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாயும், பணியாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 40 ரூபாயும் சலுகை அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu