எல் ஐ சி நிறுவனம் வங்கதேசத்தில் உள்ள தனது அலுவலகத்தை மூன்று நாட்களுக்கு மூடுவதாக நேற்று அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை பெரிய அளவில் வெடித்துள்ளது. இதன் காரணமாக நடைபெறும் போராட்டங்களால் அரசு 5 முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் எல் ஐ சி ஆர் நிறுவனம் ஆகஸ்ட் 5 முதல் 7 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தன்னுடைய அலுவலகத்தை மூடுவதாக நேற்று அறிவித்தது. இந்நிலையில் பங்குச்சந்தையில் எல்ஐசி இன் பங்கு விலை 6.10 சதவீதம் குறைந்து ரூபாய் 1,110 இல் முடிவடைந்தது.