எல்ஐசி நிறுவனம், அண்மையில் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்த நிறுவனத்தின் நிகர வருவாய் 15952 கோடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. முந்தைய ஆண்டின் 1434 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில், இது 27% வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இன்றைய பங்குச் சந்தையில், எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 9% உயர்ந்து வர்த்தகமாயின.
மும்பை பங்குச் சந்தையில், எல்ஐசி பங்குகளின் விலை 8.70% உயர்ந்து, 682.70 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில், 9.11% உயர்ந்து, 684.90 ரூபாய்க்கு வர்த்தகமானது.
கடந்த மே மாதம், பொதுப்பங்கீட்டிற்கு வந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 682.9 கோடியாக பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் பன்மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, எல்ஐசி நிறுவனத்தின் மொத்த வருவாயில் 40% அதன் முதலீடுகளில் இருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.