இஸ்ரேல் தாக்குதலால் 54,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; நிவாரணம் பெற்ற மக்களையே ராணுவம் சுட்டது என புகார். மிகவும் குறைவாக அனுமதிக்கப்படும் உதவிப் பொருட்கள் கூட, கருப்பச்சந்தையில் ஆபத்தான விலைக்குச் சென்று, மக்கள் துயரத்தில் வாடுகின்றனர்.
இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக நாடுகளின் அழுத்தத்தால் சில நிவாரண பொருட்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் அவை பொதுமக்களிடம் செல்லும் முன் ராணுவ தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். தற்போது, இந்த உதவிப் பொருட்கள் சிலர் கையகப்படுத்தி, பலமடங்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். ஒரு பாக்கெட் பிஸ்கட் ரூ.2,300க்கும் மேல், சர்க்கரை, எண்ணெய், உருளைக்கிழங்கு போன்ற தேவையான உணவுப் பொருட்கள் ரூ. 2,000 முதல் 5,000 வரை விலை நிர்ணயிக்கப்படுகின்றன. இஸ்ரேல் தாக்குதலும், இந்த பட்டினி விலையும் காசா மக்களின் வாழ்க்கையை இருபுறத்திலும் அழிக்கிறது.