நாடு முழுவதும் பட்டா, நில வரைபடம் போன்ற ஆவணங்கள் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படுகின்றன. இவற்றில் உரிமையாளர்களின் ஆதார் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
நில ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆதார் ,பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதில் முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம், உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது. இதில் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை நில ஆவணங்களில் இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தற்போதுள்ள பட்டாக்களில் உள்ள விவரங்கள் உரிமையாளர் குறித்த அடையாளத்தை உறுதி படுத்தவில்லை. இதற்காக எந்தவித ஆவணங்களும் போதுமானதாக இல்லை. எனவே இவற்றில் நில உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவர் பெயரில் எத்தனை சொத்துக்கள் உள்ளது என்பதை அரசு அதிகாரிகள் தெரிந்துகொள்ள இது உதவும் எனவும், நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்கும். மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.