பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிஸ் ட்ரஸ் ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு உக்ரைனுக்கு உதவுவார் என்று தான் நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
ஜெலென்ஸ்கி தனது தினசரி உரையில் ௯றியதாவது, பிப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் உக்ரைனின் நட்பு நாடாக இருந்து வருகிறது. அதனுடன் இராணுவ வன்பொருள், நிதியுதவி மற்றும் பயிற்சி வளங்களை உக்ரைனின் படைகளுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள
லிஸ் ட்ரஸ் , உக்ரேனிய மக்களைப் பாதுகாப்பதற்கும், ரஷ்யாவின் தாக்குதல் முயற்சிகளை முறியடிப்பதற்கும் உக்ரைனுக்கு பெரிதும் உதவுவார் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.