உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 10 முதல் நேரடி, ஆன்லைன் கலப்பு விசாரணை

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்ரல்10-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையி்ல் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக கலப்பு முறையில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்ரல் 10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை […]

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்ரல்10-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையி்ல் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக கலப்பு முறையில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்ரல் 10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்லைன் காணொலி காட்சி என இரண்டு முறையிலும் கலப்பு விசாரணை நடைபெறும். இந்த வசதியை வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் நேரடியாக ஆஜராகும் வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல வழக்குகளையும் மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu