கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

September 29, 2022

மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,17,617 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2,756 கோடி […]

மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,17,617 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2,756 கோடி தள்ளுபடி வழங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 10-க்குள் கடன் தள்ளுபடி ரசீது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் மாணவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,000 சங்கங்களை பலவகை சேவைப்பிரிவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு 400 சங்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.

கோழி, ஆடு, மீன் வளர்க்கும் 1.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.589 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளை இணைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளோம். 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் 780-க்கும் மேற்பட்டகூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu