பாராளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாளை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் அடங்கிய 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் 19ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் வெயில் அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.