டென்மார்க்கின் Svendborgsund சேனலில் தனித்து வாழும் டெல்லே என்ற பாட்டில்நோஸ் டால்பினின் வினோதமான நடத்தை விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக கூட்டமாக வாழும் டால்பின்கள், தனியாக வாழ்வது மிகவும் அரிதானது. ஆராய்ச்சியாளர்கள் 69 நாட்கள் டெல்லியின் ஒலிகளை பதிவு செய்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் டெல்லே பலவிதமான ஒலிகளை எழுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்துவமான "கையொப்ப விசில்" ஒலி ஒன்று இருக்கும். ஆனால் டெல்லே பலவிதமான "கையொப்ப விசில்களை" எழுப்பியது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
இதற்கு காரணம் என்ன என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர். டெல்லே தனியாக இருப்பதால், தானாகவே இவ்வாறு ஒலிகளை எழுப்பலாம் அல்லது மற்ற டால்பின்களை தன்னை நோக்கி ஈர்க்கும் விதமாக இவ்வாறு ஒலிகளை எழுப்பலாம் என கருதப்படுகிறது. இந்த ஆய்வு, தனித்து வாழும் டால்பின்களின் நடத்தை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், டால்பின்களின் தொடர்பு முறைகள் குறித்தும் புதிய விஷயங்களை கற்றுத்தருகிறது.