தனிமை மிகப்பெரிய அச்சுறுத்தல் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை

November 22, 2023

மனிதர்கள் தனிமையில் இருப்பது அவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுதலாக உள்ளது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.தனிமையில் இருப்பது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு உடல் உபாதைகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இருதய நோய், பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற உடல் கோளாறுகளும், மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற மனக்கோளாறுகளும் நேரடியாக தனிமையுடன் தொடர்பு கொண்டதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், தனிமையில் உள்ளவர்களால் சமூகத்துடன் இணக்கமாக வாழ முடியாத […]

மனிதர்கள் தனிமையில் இருப்பது அவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுதலாக உள்ளது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.தனிமையில் இருப்பது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு உடல் உபாதைகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இருதய நோய், பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற உடல் கோளாறுகளும், மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற மனக்கோளாறுகளும் நேரடியாக தனிமையுடன் தொடர்பு கொண்டதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், தனிமையில் உள்ளவர்களால் சமூகத்துடன் இணக்கமாக வாழ முடியாத நிலை நேர்கிறது. எனவே, இது சமூகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. அத்துடன், நாள் ஒன்றுக்கு 15 சிகரட்டுகள் புகைப்பதன் மூலம் ஏற்படும் கொடிய உடல் பாதிப்பை விட, தனிமையில் இருப்பதால் அதிக பாதிப்பு நேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனிமைக்கான தீர்வுகளை அறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu