தமிழகத்தில் சில மாநிலங்களில் அதிகமான வெப்பம் இருந்து வந்த நிலையில் தற்போது வடக்கு வங்க கடலில் காற்றழுத்தம் உருவானதால் வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஏப்ரல், மே கோடை காலங்கள் போன்று வெயில் இருந்து வந்தது. வடமேற்கு திசையில் இருந்து வரும் காற்று தடை பட்டதால் வெப்பம் அதிகரித்தது. இது மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வடக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதனால் அங்கு மேகங்கள் உருவாவதன் மூலம் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் வெயில் இருக்கும். சென்னை மற்றும் வட மாநிலங்களில் வெயில் குறைய தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.