கன மழையின் காரணமாக கோயம்பேடு மார்கெட்டிற்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகள் கிலோவிற்கு 10 முதல் 20 வரை அதிகரித்து உள்ளது. அதன்படி வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், காரட், பீட்ரூட், முட்டைகோஸ், பாகற்காய், முருங்கக்காய் ஆகியவை அனைத்தும் விலை உயர்ந்து உள்ளது. மேலும் பெரிய வெங்காயம் கிலோ 70க்கும் சின்ன வெங்காயம் ரூபாய் 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சீரான பின்னரே விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.