டார்க் நெட் மூலம் தொடர்பு, கிரிப்டோ கரன்சி மூலம் கட்டணம் என முழுக்க முழுக்க இணையம் வாயிலாக,இந்தியாவில் போதைப்பொருள் விற்பனை நடந்துள்ளது. LSD என்று அழைக்கப்படும் லைசர்ஜிக் ஆசிட் டைத்தலமைடு என்ற வேதிப்பொருள், அதிக போதை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நெதர்லாந்து அல்லது போலாந்தில் இருந்து இது இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்கப்படுகிறது. இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் அதிரடி நடவடிக்கைகளால், இன்று 15000 blot LSD கைப்பற்றப்பட்டுள்ளது. இது சந்தை அளவைவிட 2500 மடங்கு உயர்வாகும். இதன் மதிப்பு 10.5 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில், இதுவே மிகப்பெரிய அளவாகும்.
எல் எஸ் டி போதை மருந்தை கள்ளச் சந்தையில் வாங்கி, இந்தியா முழுவதும் விற்பனை செய்த போதை கும்பலின் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை அணுகி, கிரிப்டோ கரன்சி வாயிலாக கட்டணங்களை பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் நிபுணர்களாக உள்ளனர். தனியாக செய்திகளை பரிமாற்றம் செய்யும் செயலி, டார்க் நெட் வெப்சைட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.