10000 கோடி ரூபாய் பங்குகள் திரும்பப் பெறப்படுகிறது - எல் அண்ட் டி அறிவிப்பு

July 26, 2023

எல் அண்ட் டி நிறுவனம், நேற்று 10000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு சிறப்பு டிவிடெண்ட் தொகையாக 6 ரூபாய் நிர்ணயம் செய்ய நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 3,33,33,333 பொது பங்குகளை, எல் அண்ட் டி திரும்ப பெற உள்ளது. மேலும், 2 ரூபாய் பேஸ் வேல்யூவுக்கு இந்த பங்குகள் திரும்பப் […]

எல் அண்ட் டி நிறுவனம், நேற்று 10000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு சிறப்பு டிவிடெண்ட் தொகையாக 6 ரூபாய் நிர்ணயம் செய்ய நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 3,33,33,333 பொது பங்குகளை, எல் அண்ட் டி திரும்ப பெற உள்ளது. மேலும், 2 ரூபாய் பேஸ் வேல்யூவுக்கு இந்த பங்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன. உச்சபட்சமாக, ஒரு பங்குக்கு 3000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, மொத்தத்தில், 10000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன.

நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு நிதிநிலை அறிக்கையின் படி, நிறுவனத்தின் லாபம் 46% உயர்ந்து, 2493 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், காலாண்டு வருவாய் 34% உயர்ந்து 4782 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மார்ஜின் 10.2% ஆக சரிந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu