இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பழையபடி பயணங்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், பயண பெட்டிகள் மற்றும் பைகள் விற்பனையில் 2022 ஆம் ஆண்டில் உச்சகட்ட வளர்ச்சி பதிவாகியுள்ளது.
பயணப் பெட்டிகள் மற்றும் பைகள் விற்பனைத் துறையை பொறுத்தவரை கடந்த 2019 ஆம் ஆண்டு அதிகபட்ச விற்பனை பதிவானது. அதன் பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விற்பனை சரிந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் 2019 ஆம் ஆண்டை விட 50 முதல் 70% வரை விற்பனை வளர்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பெருநகரங்கள் மட்டுமில்லாமல் இரண்டாம் தட்டு மற்றும் மூன்றாம் தட்டு நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலின் போது எளிமையான முறையில் நடந்த இந்திய திருமணங்கள் பழையபடி ஆடம்பர முறைக்கு மாறி உள்ளதால், சராசரியாக ஒவ்வொரு திருமணத்திற்கும் 3 முதல் 8 பயணப் பைகள் / பெட்டிகள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபாரி, சம்சோனைட் உள்ளிட்ட பிரபல பயண பெட்டி நிறுவனங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.