லூலு குழுமத்தின் சேர்மன் யூசுப் அலி சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் புதிய வணிக வளாகங்களை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
"கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோ, கோயம்புத்தூர் நகரங்களை தொடர்ந்து ஹைதராபாத்தில் 6வது வணிக வளாகம் திறக்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் ஹைதராபாத் நகரத்தில் லூலு வணிக வளாகம் திறக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் மிகப்பெரிய வணிக வளாகங்களை கட்டி வருகிறோம். வரும் ஆண்டுகளில் அவை திறக்கப்படும்" என லூலு குழும நிறுவனங்களின் தலைவர் யூசுப் அலி தெரிவித்துள்ளார். அபுதாபியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லூலு குழுமம், சர்வதேச அளவில் மிகப்பெரிய வணிக வளாகங்கள் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.