மேலும் 500 பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காலை உணவுத் திட்டம் என்பது அனைவரும் வரவேற்கும் திட்டமாக அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரையில் கடந்த செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனால் காலை உணவுத் திட்டம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை மேலும் 500 பள்ளிக்கூடங்களுக்கு விரிவாக்கம் செய்ய அடுத்த கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டதால் மேலும் 500 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.